search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரம் மாற்றம்"

    • வழக்கமான மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 5.00 முதல் இயக்கப்படும்.
    • மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்த வேண்டுகோள்.

    சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வரும் 6ம் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள், வருகின்ற (06.01.2024) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

    மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சிறப்பு QR குறியீடு பதியப்பட்ட பயணஅட்டையை பயன்படுத்தி 06.01.2024 அன்று மட்டும் மெட்ரோ ரெயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த QR குறியீடை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.

    வழக்கமான மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 5.00 முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வருகிற 28-ந் தேதி, ஐப்பசி பவுர்ணமி என்பதால், சிவாலயங்களில் அன்னாபிேஷக பூஜைக்கு ஏற்பாடு நடந்தது.
    • 11 மணி முதல் 12 மணி வரை அன்னாபிேஷகமும், 12:30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    திருப்பூர்:

    ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவாலயங்களில் அன்னாபிேஷகம் நடத்துவது வழக்கம். குறிப்பாக மாலை 6 மணிக்கு, மூலவருக்கு அபிேஷகம் நடத்தி, அன்னத்தால் லிங்கத்திருமேனிக்கு அலங்காரம் செய்து பக்தர் வழிபடுவர்.

    வருகிற 28-ந் தேதி, ஐப்பசி பவுர்ணமி என்பதால், சிவாலயங்களில் அன்னாபிேஷக பூஜைக்கு ஏற்பாடு நடந்தது. இந்நிலையில் பவுர்ணமி நாளில், சந்திரகிரஹணம் ஏற்படுவதால் அன்னாபிேஷக நேரம் மாற்றப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருப்பூர் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வழக்கமாக மாலை நேரம் நடக்கும் அபிேஷக பூஜை, 28ந் தேதி காலை நேரத்திலேயே நடக்கிறது. காலை 10:30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அதனை தொடர்ந்து 11 மணி முதல் 12 மணி வரை அன்னாபிேஷகமும், 12:30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    கிரஹணம் ஏற்படுவதால், கோவில்கள் வழக்கம் போல் மதியம் நடை அடைக்கப்பட்டு, அடுத்த நாள் (29-ந் தேதி) காலை 6 மணிக்கு திறந்து சாந்திபூஜைகள் செய்து, வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சாமளாபுரம் தில்லைநாயகி சமேத ஸ்ரீசோழீஸ்வரர் கோவிலில் மாலை 4 மணிக்கு அபிேஷக பூஜை துவங்குகிறது. மாலை 6 மணிக்குள் அன்னாபிேஷக பூஜைகள் நிறைவு செய்யப்படும். இரவு 7 மணிக்கு, கிரஹணத்தை முன்னிட்டு நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

    • சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்துக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • திருப்பூருக்கு 7.25 மணிக்கு வந்த ரெயில் இனி 7.18 மணிக்கும் வந்து செல்லும்.

    திருப்பூர்

    சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சேலத்துக்கு மாலை 5.58 மணிக்கு வந்த ரெயில் இனி 5.48 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.47 மணிக்கு வந்த ரெயில் இனி 6.37 மணிக்கும், திருப்பூருக்கு 7.25 மணிக்கு வந்த ரெயில் இனி 7.18 மணிக்கும் வந்து செல்லும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
    • கல்லூரி நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 வரை என மாற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா்- பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் சுமாா் 4 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் இடநெருக்கடியால் கல்லூரி காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக செயல்பட்டு வந்தது. இதனால் மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வந்தனா்.

    இதனிடையே, கல்லூரியில் ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கடந்த ஆகஸ்ட் 14 ந்தேதி திறக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து, கல்லூரி செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 வரை கல்லூரி செயல்படும் என முதல்வா் எழிலி தெரிவித்துள்ளாா்.

    • சேலம் வழியாக இயக்கப் படும் சில ரெயில்களின் ேநரம் மாற்றப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை சேலம் மண்டல ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    சேலம்:

    சேலம் வழியாக இயக்கப் படும் சில ரெயில்களின் ேநரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சேலம்- ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு இரவு 12.12 மணிக்கு வந்து கொண்டிருந்த ஆலப்புழா- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இரவு 12.02 மணிக்கு வந்து செல்லும். அதுேபால் இரவு 12.02 மணிக்கு வந்து கொண்டிருந்த கோவை-சில்ஷார் வாராந்திர ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இரவு 12.25 மணிக்கு வந்து செல்லும். இதே போல் இரவு 12.02 மணிக்கு வந்து கொண்டிருந்த எர்ணாகுளம்- பாட்னா ரெயில் (வாரம் 2 முறை வரும் ரெயில்) வருகிற 21-ந்தேதி 12.12 மணிக்கு வந்து செல்லும். இந்த தகவலை சேலம் மண்டல ரெயில்வே கோட்டம் தெரிவித்து ள்ளது.

    • 27 ரெயில்களில் புறப்படும் பயணிக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • திருச்சி நிலைய அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்கு (மாலை, 4:50 மணிக்கு) வந்து சேரும்.

     திருப்பூர்:

    திருச்சி மார்க்கத்தில் நடக்கும் பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக 27 ெரயில்களில் புறப்படும் பயணிக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    வருகிற ஆகஸ்டு 13ந்தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் புறப்படும் ெரயில் சேரன் எக்ஸ்பிரஸ் (எண்:12673) காட்பாடி நிலையத்திற்கு இரவு 11:48 மணிக்கு வந்து 5 நிமிடம் தாமதமாக இரவு 11:53 மணிக்கு வரும். இந்த ெரயில் ஜோலார்பேட்டை நிலையத்திற்கு அதிகாலை 1:03க்கு பதிலாக 10 நிமிடம் தாமதமாக 1:13 மணிக்கு வந்து சேரும்.

    ஆகஸ்டு 14ந்தேதி மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (எண்:12083) மதியம் 2:55 மணிக்கு பதில் 5 நிமிடம் தாமதமாக 3 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்படும். கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் நிலையங்களுக்கு தாமதமாக வரும்.

    ஆனால் திருச்சி நிலைய அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்கு (மாலை, 4:50 மணிக்கு) வந்து சேரும். இந்த 2 ரெயில்கள் உட்பட 25 ெரயில்களின் புறப்படும், பயணிக்கும் நேரம் ஆகஸ்டு 2-வது மற்றும் 3-வது வாரம் குறிப்பிட்ட தேதியில் மாற்றப்பட்டுள்ளது. இத்தகவலை ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் பயணிகள் அறியலாம் என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • திருநெல்வேலி ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 3 மணிக்கு சென்று 3.05 மணிக்கு புறப்படும்.
    • நாகர்கோவிலுக்கு 4.50 மணிக்கு சென்று சேரும்.

    திருப்பூர் :

    கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.22668) திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லும் நேரம் வருகிற 28-ந் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி திருநெல்வேலி ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 3.20 மணிக்கு சென்று 3.25 மணிக்கு புறப்பட்டது. இனி 3 மணிக்கு சென்று 3.05 மணிக்கு புறப்படும். வள்ளியூர் ரெயில் நிலையத்துக்கு 4.01 மணிக்கு சென்று 4.02 மணிக்கு புறப்பட்டது. இனி 3.43 மணிக்கு சென்று 3.45 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலுக்கு 5.05 மணிக்கு சென்று சேர்ந்தது. இனி 4.50 மணிக்கு சென்று சேரும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராமேசுவரம் - மதுரை ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
    • மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    பரமக்குடி - சத்திரக்குடி இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை (1-ந் தேதி) முதல் 31-ந் தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து வழக்கமாக காலை 11 மணிக்கு புறப்படும் மதுரை ரெயில் (06654), ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு செல்லும். பாம்பன் ரெயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த ரெயில் ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • தொலைபேசி எண் இணைப்பு மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
    • மதியம் ஒரு மணி முதல் இரவு 8 மணி வரை நேரமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    கோவை,

    இந்திய அஞ்சல் துறை யுஐடிஏஐ உடன் இணைந்து புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைப்பு மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

    கோவை ரெயில்வே சந்திப்பு வளாகத்தில் இயங்கி வரும் கோவை ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்பட்டு வந்தது. தற்போது இச்சேவை மதியம் ஒரு மணி முதல் இரவு 8 மணி வரை நேரமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை ஆர்.எம்.எஸ். கோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ×